தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 பேதுரு 5: 6

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிசெய்தால் முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்க்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் - திருஷ்டாந்தத்தோடு விளக்கம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆசாரியத்துவ பணி மிகவும் பரிசுத்தமானது என்றும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மளில் திரியேக தேவனாக இருந்து ஆசாரியத்துவ பணி செய்கிறார் என்று தியானித்தோம்.  

ஆனால் அடுத்தப்படியாக தியானிப்பது என்னவெனில் 

எண்ணாகமம் 4:17-23  

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.

அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:

ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.

பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:

கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.

கர்த்தர் மோசேயிடம் சொல்வதென்னவெனில் லேவியருக்கள் கோகாத் புத்திரரின் வம்சங்கள் அழிந்துப்போகாதபடி பார்க்கவேண்டும், எப்படியென்றால், அவர்கள் மகா பரிசுத்தமானவைகளை கிட்டுகையில், அவர்கள் சாகாமல் உயிரோடிருக்கும் படியாக  செய்ய வேண்டுவதென்னவென்றால் ஆரோனும் அவன் குமாரரும் அவரவர் செய்யும் வேலைக்கும், அவரவர் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்.  எப்படியென்றால் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது அவர்கள் பார்க்க உட்பிரவேசியாமல் இருந்தால் அவர்கள் சாகாதபடி காக்கபடுவார்கள். 

அதென்னெவனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சாட்சி பெட்டியாக திருஷ்டாந்தபடுத்தப்படுகிறது.  அந்தபெட்டி மூடப்படுகிறது. அதின் விளக்கங்கள் 

எண்ணாகம் 4: 5-14

பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,

அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.

அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,

பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,

பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,

அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.

நமது ஆராதனைக்கேற்ற வஸ்திரம் கிறிஸ்து.  அவரை மறைப்பொருளாக  பழைய ஏற்பாடு காட்டுகிறது.  அவர் உலகத்திற்கு வந்துதன்னை வெளிப்படுத்தும் வரையிலும், அதனை பார்க்கிறவர்கள் செத்து போவார்கள், ஏனென்றால் அது மகா பரிசுத்தமானது. அதனால் எல்லாரும் அழிந்து போகாதபடி கர்த்தர் காக்கும்படியாக கட்டளையிடுகிறார்.  

அல்லாமலும் கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் ஆசரிப்பு கூடாரத்தில் வேலை செய்கிறவர்கள் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிலும் இருக்க வேண்டும் என்றும், மேலும் பணிவிடை செய்கிறதிலும்,  சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது 

எண்ணாகமம்  4:25-28 

அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,

பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.

கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.

கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

இவை இயேசு கிறிஸ்துவின் கிருபையை குறித்து தான் எழுதப்பட்டிருக்கிறது.  ஆசாரியராகிய கிறிஸ்துவின் கைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அடுத்ததாக 

எண்ணாகமம் 4: 29-33

மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,

முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.

ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,

சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.

ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

இதனை நாம் தியானிக்கும் போது சபையின் மனுஷரின் எல்லா  ஆத்மீக வாழ்க்கையை விசாரிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இவர்களும் முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  அல்லாமலும் ஆசாரியராகிய கிறிஸ்துவின் கைக்குள்ளாக அடங்கியிருக்க வேண்டும்.    இவ்விதமாக கோகாத் புத்திரரில் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது பேர்.  கெர்சோன் புத்திரில் மேற்கூறப்பட்டவைளில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர். மெராரி புத்திரரில், அவர்கள் பிதாக்களின் வம்சங்களின் படி முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிலும்  மோசே, ஆரோன் என்பவர்களால் எண்ணப்பட்டவர்கள் மூவாயிரத்து இருநூறு பேர்.  

இவ்விதம் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடை வேலையிலும், சுமக்கும் வேலையிலும் மொத்தமாக லேவி வம்சத்தாரின் பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் மோசே, ஆரோன், இஸ்ரவேல் பிரபுக்களால் எண்ணப்பட்டவர்கள் எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது பேராயிருந்தார்கள்.  

இவ்விதமாக கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்ட பிரகாரம் செய்தார்கள்.  இதனை தியானிக்கிற அன்பானவர்களே கர்த்தரின் கட்டளை பிரகாரம் மகா பரிசுத்தமானவைகளில் நாம் நடந்துக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.