தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 6: 34

ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருடைய கட்டளை பிரகாரம் ஆசரிப்பு கூடாரத்தில் வேலை செய்கிறவர்கள் முப்பது வயது முதல் ஐம்பது வரையிலும் தான் பணிவிடை செய்யவேண்டும் என்று தியானித்தொம்.  கர்த்தராகிய இயேசுவின் பாடுமரணத்தை நாம் நம்முடைய சரீரத்தில் சுமந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும், மேலும் ஜனங்களின்  அனுதின ஆத்மீக வாழ்க்கையை அனுதினம் காக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றும் தியானித்தோம்.  

ஆனால் இந்நாளில் நாம் தியானிக்கபோகிற காரியங்கள் என்னவென்றால் 

எண்ணாகமம் 5:1-4

கர்த்தர் மோசேயை நோக்கி:

குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார்.

கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள்.

கர்த்தர் மோசேயை நோக்கி சொல்வது என்னவென்றால் குஷ்டரோகிகள், பிரமுயம் உள்ளவர்கள், சவத்தினால் தீட்டுபட்டவர்கள் இவர்கள் பாளயத்திலிருந்து விலக்கி விட வேண்டும்.  என்னவெனில் பாளயம் என்பது சபையை குறிக்கிறது.  இவர்களை குறித்து சில நாட்களுக்கு முன்பு விளக்கமாக தியானித்தோம்.    ஆண்பிள்ளையானாலும், பெண்பிள்ளையானலும், கர்த்தர் வாசம் பண்ணும் இடம் தீட்டுபடாதபடி இருக்கவேண்டுமானால்  அப்படிபட்டவர்களை விலக்கிவிட வேண்டும்.  என்னவெனில் நம்முடைய உள்ளமும் கர்த்தர் வாசம்பண்ணுமிடமாயிருக்கிறதினால்  அங்கும் எல்லாவித தீட்டானவைகளை நம் உள்ளத்தின் எண்ணத்திலிரூந்து புறம்பாக்கி விட வேண்டும். அவ்விதம் கர்த்தர் சொன்னது போல் இஸ்ரவேல் புத்ததிரர் செய்தார்கள்.  

அடுத்தபடியாக கர்த்தர் சொல்வது ஒரு புருஷனோ, மனைவியோ மனுஷர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவம் செய்து விட்டால் அந்த பாவத்திற்காக பாவ அறிக்கையிட்டு அதோடு, அபராதத்தோடே ஐந்தில் ஒரு பங்கு கூட்டி கொடுக்கக்கடவன்.  அதனை கேட்டு வாங்குவற்கு யாரும் இல்லாமலிருந்தால்  அதற்காக ஆட்டுகடாவை பாவ நிவிர்த்தி  செய்து அதோடு அபராதமாக செலுத்தப்பட்டு  ஆசாரியனுடையதாகும்.  இதனை கர்த்தர் திருட்ஷ்டந்தத்தோடு சொல்வது என்னவென்றால் நம்முடைய பாவநிவிர்த்திக்காக  ஆட்டுகுட்டியானவராகிய கிறிஸ்து பலியிடப்படுகிறதும், அவ்விதம் பலியிடப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பாவம், மரணம் என்பவற்றிலிருந்து விடுதலை ஆக்கும் போது நாம் ஒவ்வொருவரும் ஆசாரியராகிய கிறிஸ்துவினுடையவர்களாகுவோம்.  அதன் பிறகு  இஸ்ரவேல் புத்திரர் படைக்கும் ஒவ்வொரு பரிசுத்த வஸ்துகள் யாவும் ஆசாரியனுக்குரியதாகும்.  

அல்லாமலும் எண்ணாகமம் 5: 12-15

நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி,

ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,

எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்,

அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.

மேற்கூறபட்ட வார்த்தைகள் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்வது ஒரு மனுஷனுடைய மனைவி பிறர் முகம் பார்த்து புருஷனுக்கு துரோகம் பண்ணி வேறொருவனோடே சம்யோகமாய் சயனித்திருந்தால் , அந்த விஷயத்தில் அவள் தீட்டுபட்டவளாயிருந்து, தன் புருஷனுக்கு மறைக்கப்பட்டிருக்க, சாட்சியில்லாமல் கையும், களவுமாக பிடிக்கபடாமலிருக்க,`அவன் மேல் எரிச்சலின் ஆவி வந்து, தன் மனைவி தீட்டுபடுத்தப்பட்டிருக்க , அல்லது தீட்டு படுத்தபடாமலிருக்க எரிச்சலின் ஆவி அவன் மேல் வந்து அவள் மேல் குரோதங்கொண்டிருந்தாலும் 

எண்ணாகமம் 5:15 

அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.

இந்த வசனங்களின் படி அவன் கர்த்தருக்கு தூபவர்க்கம் போடக்கூடாது. பிரியமானவர்களே மனைவி தீட்டுபட்டு புருஷன் மீது எரிச்சலின் ஆவியினால் அவனை கர்த்தர் ஏற்றுக்கொள்ளவில்லை.  பின்பு ஆசாரியன் அவளை கர்த்தரின் சந்நிதியில் நிறுத்துகிறான். 

எண்ணாகமம் 5:17-31

ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,

ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும்.

பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.

உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,

கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.

சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.

பின்பு ஆசாரியன் இந்தச் சாப வார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு,

சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.

பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,

ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.

அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.

அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.

ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,

புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.

புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.

பிரியமானவர்களே கர்த்தருடைய வார்த்தையை நிதானமாக நாம் நன்றாக ஆராய்ந்துக்கொண்டு நம் தப்பிதங்கள் இருந்தால் பாவ அறிக்கை எப்படி கர்த்தர் செய்ய சொல்கிறாரோ அப்படி நாம் நம்மை தாழ்த்தி அறிக்கை செய்ய வேண்டும். ஆனால் மேற்கூறிய வசனப்பிரகாரம் இடுப்பு சூம்ப பண்ணி, அவளுடைய வாழ்க்கையை கர்த்தர் கசப்பாக்குகிறார்.  கசப்பான தண்ணீரினால் அவளை கழுவிப்போட்டு, பின்பு கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி செய்கிறார். அப்பொழுது சாபகாரணமான அந்தஜலம் அவளுக்குள் இறங்கி  கசப்பாகும்.  பின்பு அவள் வயிறு வீங்கி, இடுப்பு சூம்பும்.  

இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாவாள்.   ஆனால், புருஷனானவன் அக்கிரமத்துக்கு நீங்கலாயிருப்பான். ஆனால் ஸ்திரீயோ தன் அக்கிரமத்தை சுமப்பான் என்று கர்த்தர் சொல்கிறார்.  இதிலிருந்து தெரிய வருவது புத்திரர் ஆனபிறகு எல்லா பாவமும் மன்னிககப்படாது என்பதை நாம் நன்றாக உணர்ந்து தவறு செய்யாதபடி நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.