தேவனுக்கே மகிமையுண்டாவதாக

புலம்பல் 4: 7

அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய இஸ்ரவேல் புத்திரர் நசரேய விரதம் காக்கும் விதம். விளக்கம் நாளை.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய இஸ்ரவேல் புத்திரர் ஒவ்வொருவரும் தங்கள் பரிசுத்தம் காத்துக்கொள்ள வேண்டும் என்று சில திருஷ்டாந்தங்களோடு தியானித்தோம் 

அல்லாமலும் நாம் இந்த நாளில் தியானிக்கிற கருத்து என்னவெனில் 

எண்ணாகமம் 6:1-14

கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,

தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.

அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.

அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.

அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.

அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,

எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.

அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.

நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,

சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

கர்த்தர் மோசேயிடத்தில், இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல சொல்வது என்னவெனில் புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் நசரேய விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி விசேஷித்த பொருத்தனைப்பண்ணிக்கொண்டால் திராட்ச ரசம், மதுபானம், திராட்ச ரசத்தின் காடி, மதுபானத்தின் காடி, திராட்ச ரசத்தினால் செய்த எந்தவிதமான பானத்தையும் குடியாமலும், திராட்சபழங்களையாவது,மற்றும் திராட்சவற்றல்களையாவது புசியாமல் இருக்கவேண்டும்.  நசரேய விரதம் இருக்கும்  நாளெல்லாம் திராட்ச செடியின் தோல்முதல் விதைவரையிலும் செய்யப்பட்ட எதையும் புசிக்கக்கூடாது.  

அல்லாமலும் நசரேய விரதம் காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவர்கள் தலையின்மேல் படக்கூடாது. அவன் விரதம் காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து  தலைமயிர் வளரவிடகடவன்.   அல்லாமலும் கர்த்தருக்கென்று விரதம் காக்கும்  நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது என்பது கர்த்தருடைய கட்டளையாகும். அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால் மரணமடைந்த தகப்பன், தாய், சகோதரன், சகோதரி இவர்களால் தன்னை தீட்டுப்படுத்தலாகாது.  அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருப்பான்.

யாராவது அவர்களியிடையில் சடுதியாய் மரணமடைந்தால் நசரேய விரதமுள்ள அவன் தலை தீட்டுபடும்.   அப்படியானல் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தலைமயிரை சிரைத்துக்கொண்டு எட்டாம் நாளில் நம்முடைய ஆத்துமாவின் திருஷ்டாந்தத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறா குஞ்சுக்களையாவது ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும், என்று எழுதப்பட்டிருப்பது, பிரேதத்தினால் தீட்டுப்பட்டதினால் தங்கள் ஆத்துமா பாவநிவாரணபலியாகவும்,  சர்வாங்க தகனபலியாகவும் ஒப்புக்கொடுத்து தன்னை பரிசுத்தபடுத்திக்கொள்ளவேண்டும். அவன் மீண்டும் விரத நாட்களை தொடர்ந்து காத்து ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியை (நம் ஆத்துமா)  கர்த்தரின் சந்நிதியில் சமர்ப்பிக்க வேண்டும்.  ஆனால் தீட்டுபட்டதினால் அந்த நாட்கள் விருதாவாகும்.  நசரேயனுக்குரிய பிரமாணங்கள் அடுத்த நாளில் தியானிப்போம். 

பிரியமானவர்களே நாம் இதன் கருத்துக்கள் அறிந்து தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.