தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 3:9

இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் அவருடைய வீடாக மாற்றுகிறார்-திருஷ்டாந்தத்தோடு விளக்கம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை உண்மையும், நேர்மையுமாய் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோமானால் அதுவே தேவனுக்கு பிரியமாயிருக்கும்.

  அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 19:1-9  

இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,

ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,

எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,

சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதின்மூன்று.

மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது.  அவர்கள் சுதந்தரம் யூத புத்திரரின் சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.  மேலும் பட்டணங்களும் பதினேழாக இருந்தது.  அவர்கள் யூத புத்திரரின் சுதந்தரத்தின் நடுவே சுதந்தரம் பெற்றார்கள். அதனால் அவர்கள் முழு எல்லையும் யூத புத்திரரின் எல்லையே.  ஆனால் மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது.  அவர்களுக்கு 

யோசுவா 19:10-16 

மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.

அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

மேற்க்கூறப்பட்ட பட்டணங்களும், கிராமங்களுமாக பன்னிரண்டு.  அவைகளும் கிறிஸ்துவுக்குரிய சுதந்தரமாக திருஷ்டாந்தமாகிறது.   நாலாம் சீட்டு இசக்கார்  புத்திரருக்கு விழுந்தது.  என்னவெனில் 

யோசுவா 19:17-23  

நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

அப்பிராயீம், சீகோன், அனாகராத்,

ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,

ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

மேற்கூறிய வசனங்களின் படி அவர்களுக்கு கிடைத்த பட்டணங்களும், கிராமங்களும் பதினாறு, அதுவும் கிறிஸ்துக்குரிய திருஷ்டாந்தமாய் விளங்குகிறது.    ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருக்கு விழுந்தது, என்னவென்றால் 

யோசுவா 19:24-31  

ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,

அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,

எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.

அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் தீரு என்னும் அரணிப்பான பட்டணங்கள் மட்டும் திரும்பி, பின்பு அந்த எல்லை ஓசாவுக்கு திரும்பி, அக்சீபின் ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.  உம்மாவும் ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்து இருக்கிறது. இவர்களுக்கு கிடைத்த சுதந்தரம் இருபத்திரண்டு பட்டணங்களும், கிராமங்களுமே.  இதனை நாம் தியானிக்கும் போது இப்பேர்பட்ட கோத்திரத்தார் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் உலகமாகிய துன்மார்க்கத்தில் வாழ்ந்து அழிவார்கள்.  

அடுத்ததாக ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது. அதனைக்குறித்து 

யோசுவா 19:32-39  

ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.

அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.

அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

ஆதமா, ராமா, ஆத்சோர்,

கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்.

ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் நப்தலி புத்திரருக்கு கர்த்தர் சுதந்தரமாக கொடுத்த தேசங்கள்.  அவைகளிலுள்ள பட்டணங்களும் கிராமங்களுமாக பத்தொன்பது.  இவைகளின் எல்கைகள் சூரியோதய புறத்திலே யோர்தானிலே யூதாவை சேர்ந்து வரும்.  அங்கு அரணிப்பான பட்டணங்களும், கிராமங்களும் உண்டு.  ஏழாம் சீட்டு தாண் புத்திரருக்கு அவர்கள் கோத்திரங்களின் படி சீட்டு விழுந்தது. அதனைக் குறித்து 

யோசுவா 19: 40-47  

ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

சாலாபீன், ஆயலோன், யெத்லா,

ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

மேற்க்கூறிய பட்டணங்களும், கிராமங்களும் தாண் புத்திரருக்கு கிடைத்த சுதந்தரம்.தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியினால், அவர்கள் புறப்பட்டு லேசேமின் மேல் யுத்தம் பண்ணி, அதனை பிடித்து, பட்டயகருக்கினால் சங்கரித்து, அதை சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்கு, தங்கள் தகப்பனுடைய நாமத்தின் படியே தாண் என்று பெயரிட்டார்கள்.  இந்த பட்டணங்களும், கிராமங்களும், தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்கள் வம்சங்களின் படி கிடைத்த சுதந்தரம்.  

எல்லா சுதந்தரத்தைம் பங்கிட்டு தீர்ந்த பின்பு, நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கு தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தை கொடுத்தார்கள்.  கர்த்தருடைய வாக்கின்படியே அவன் கேட்ட பட்டணமாகிய எப்பராயீமின் மலை தேசத்தில் இருக்கிற திம்னாத்சேராவை கொடுத்தார்கள்.  அந்த பட்டணத்தை அவன் கட்டி அங்கே குடியிருந்தான்.    இவ்விதமாக ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திர பிதாக்களுடைய தலைவரும், சீலோவிலே ஆசரிப்பு கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில்  இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்கு சீட்டுப்போட்டு கொடுத்த சுதந்தரங்கள்.  இவ்விதமாக அவர்கள் தேசத்தை பங்கிட்டு முடித்தார்கள்.  

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட சுதந்தரமாகிய தேசத்தின் பட்டணங்களும், கிராமங்களுமோவென்றால், நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக்கி சுதந்தரித்து கொள்ளும் போது, எவ்வித செயல்பாடுகள், நம்முடைய உள்ளத்தில் அடங்கியிருக்கிறது என்று், எப்படி பொல்லாத சாத்தானுடைய கிரியைகள் நம்முடைய வாழ்வில் வந்து நம்மை வஞ்சிக்கிறது என்றும், அவைகளிலிருந்து நாம் எப்படி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்றும்,கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களிலும் துன்மார்க்க கிரியைகளில் சிக்கி விழுந்து அழிந்து போகிறவர்கள் உண்டு என்பதையும் காட்டுகிறது.  

ஆனால் பன்னிரண்டு கோத்திரங்களுடைய கிரியைகள் நம்முடைய உள்ளத்தில் செயல்படும் என்றும், அதிலிருந்து நாம் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்டு வரும்போது, கிறிஸ்து நம் உள்ளத்தை ஆளுகை செய்து, நம்மை அவர் பாதையில் நடத்தி செல்வார் என்றும், அவருடைய சத்திய வார்த்தைக்கு கீழ்படிகிறவர்களை கிருபையினால் நிரப்புவார். ஆனால் கீழ்படியாதவர்கள் தங்கள் துன்மார்க்கத்தின் பயனை பெறுவார்கள்.  ஆதலால் அவர் நம் நடுவில் குடியிருந்து, நம்மை அவருடைய வீடாக மாற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.