தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 33:13 

தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனை கெம்பீர சத்தத்தோடே மகிமைப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் கிறிஸ்துவினால் செம்மைப்படுத்தபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 65:1-2 

தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.

ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

மேற்கூறிய வசனங்கள் இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதம்.  இந்த சங்கீதத்தில்  கிறிஸ்து சீயோனின் மூலைகல்லாக இருக்கிறார்.  அந்த கல்லில் நாம் இணைக்கபட்ட கல்லாக இருப்போமானால் துதியானது கர்த்தருக்காக காத்திருக்கிறது.  அவ்விதம் நாம் இருந்தால் கர்த்தர் நம்முடைய ஜெபத்தை கேட்பார்.  ஆதலால் மாம்சமான யாவரும் கர்த்தரிடத்தில் வருவார்கள். எப்படியெனில் தங்களில் உள்ள குறைகளை தேவனிடத்தில் அறிக்கை செய்து சொல்வதும், தேவனை மேன்மைபடுத்துவதும் 

சங்கீதம் 65:3-13 

அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.

உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.

வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,

சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.

கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.

தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.

மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகள் என்னவென்றால் அவர் நம்முடைய மீறுதல்களையெல்லாம் மன்னித்து நம்மை திருத்திக்கொண்டு, அவருடைய ஒரு வயலாக்கிக்கொண்டு தானியத்தை (வசனம்) அதில் விளைய செய்து, நம்மேல் பரிசுத்த ஆவியின் மழையை பொழியப்பண்ணி, அதிலிருந்து வருகிற பயிரை புது விளைச்சலாகிய நம்முடைய ஆத்துமாவை ஆசீர்வதிக்கிறார்.  இப்படி எல்லா நாளும் நம்மிலிருக்கிற கிறிஸ்துவை தேவன் நன்மைகளால் முடிசூட்டி, அவர் பாதைகளை நெய்யாய் பொழிகிறார். வனாந்தரமாக (வெறிச்சோடி) இருந்த நம்முடைய உள்ளமாகிய தாபரங்களிலும் அது பொழிகிறது. மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கும்.  மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளதக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்து பாடுகிறது. 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் கர்த்தராகிய தேவன் கிறிஸ்துவை நம்மில் அனுப்பி நம்மை இரட்சித்து அவர் பதைகளில் நடக்கும்படியாக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் வளர்ச்சியும் அதில் நாம் எப்படி தேவனை மேன்மைபடுத்த வேண்டும் என்பதும்; அவர் நாமத்தை குறித்து கெம்பீரித்து பாடி துதி செய்வதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.